நீர்கொழும்பு சிறைச்சாலையிலள்ள சிறைக் கைதியொருவரைக் கொலை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் திட்டம் தீட்டி வருவதாக எமது இணையத்தளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.


குருணாகல் பிரதேசத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்தன நஞ்சருந்தியதால் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்.

இனிவரும் காலத்தில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து ஆவணப்படமொன்றைத் தயாரிப்பதற்கு இலங்கை விஜயம் செய்துள்ள New Generation TV India தொலைக்காட்சி சேவையின் ஊடகவியலாளர்கள் இருவரை உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற்றுமாறு இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவிதாரன உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனினால் அனுப்பப்ட்டதாகக் கூறப்படும் கடிதமொன்றை இந்நாட்களில் ஊடகங்களினால் வெளியிட்டு வருகின்றன.

உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடொன்றில் அரசியல் தஞ்சமடைந்துள்ள சிலரினால் இயக்கப்பட்டு வந்த ராவய நியூஸ் இணையத்தளத்தை இலங்கையில் பார்வையிட கடந்த 31ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்திலுள்ள எம்.பி.க்கள், அமைச்சர்கள் என சுமார் 50 பேர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும், அவரது குடும்பத்திற்கும் எதிராக அணிதிரண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச குற்றவியல் நீதி மன்றம் ஆகியவற்றினூடாக சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினான்டோ அந்த அலுவலகத்தில் அந்தப்புரமொன்றைப் பராமரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பதிலாக அவரது சகோதர் ரெய்னோ சில்வாவை அரசியலுக்குள் கொண்டுவர ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

மேல் மாகாண சபை ஆளுநர் பதவியிலிருந்து அலவி மௌலானவை நீக்கிவிட்டு பாராளுமன்ற உறுப்பினர் கீதாஞ்சலி குணரத்னவை நியமிக்க ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.

கோட்டே நகர சபையின் நகர சபையின் உப தலைவர் சட்டத்தரணி மதுரங்க விதானகே இளம் பெண் ஒருவருடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவை அந்த நகர சபையின் தலைவர் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரியவருகிறது.

களனி பிரதேசத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையில் மேற்கொள்ளப்பட்டுவந்த காணிக் கொள்ளையின் விபரங்கள் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளன.

தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நடத்தப்படும் இடத்தில் ஊடக அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் கார்டுன் கண்காட்சியொன்றை நடத்தவும், அலங்கரிப்பதற்காகவும் அந்த அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. கனேகல பாரியளவு நிதியை ஒதுக்கியுள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவிலிருந்து இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த சந்திரபால லியனகே நியமிக்கப்பட்ட பணிக்காலத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
மேலதிகக் ஆக்கங்கள்...
- ஏ.பி.சி நிறுவனத்தைப் பின்னால் தூரத்தும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
- அமைச்சர் மேர்வின் சில்வாவை களனியில் இருந்து வெளியேற்றத் தீர்மானம்
- மேர்வின் சார்பாக காளி கோயிலில் ஆடு பலி கொடுக்கப்பட்டுள்ளது
- சவேந்திர சில்வாவின் நியமனத்தை நிராகரிக்குமாறு பான் கீ மூனிடம் அமெரிக்க மனிதஉரிமை அமைப்புகள் இணைந்து வேண்டுகோள்
- சிறிலங்கா அரசின் இன அழிப்பு! 2 கோடி மக்களிடம் தென் அமெரிக்க மக்களிடம் கொண்டு சென்ற பிரித்தானிய தமிழர் பேரவை






